திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வடக்குவளைய பட்டியைச் சேர்ந்த அய்யாவு(62) என்பவரை விருவீடு காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி விருவீடு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வனிதா மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.ஸ்டெல்லா மேரி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று (10.06.2022) திண்டுக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி திரு.விஜயகுமார் அவர்கள் குற்றவாளிக்கு 07 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா