திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபர் மீது டாடா ஏசி வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்திய – பட்டுக்கோட்டை, செண்டாங்கடு, தெற்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பாலசுப்ரமணியம் (வயது-33). என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கின் விசாரணை வலங்கைமான் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் (10.03.2025) குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும் விதித்து வலங்கைமான் குற்றவியல் நீதித்துறை நடுவர் தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற காவலரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள்