திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள லிங்கவாடியை சேர்ந்தவர் தங்கராஜ் (41), டி.வி மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (37), கடந்த 6-ந்தேதி லிங்கவாடியில், இவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார், தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை வெட்டி கொலை செய்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உதயகுமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர், நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவங்கள் குறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தங்கமுனியசாமி, அவர்களங வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில் உதயகுமாரை அடித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய லிங்கவாடியை சேர்ந்த சோலை (21), வெள்ளிமலை (39), பாலகுமார் (32), சிவம் (26), அருண்குமார் (26), சுரேஷ் (39), ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
