இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ராமச்சந்திரன் (DCRB), திரு.வெங்கடகிருஷ்ணன் (IUCAW), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜாபர் சித்திக் (அரக்கோணம் உட்கோட்டம்) அவர்கள் தலைமையில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது.