திருப்பத்தூர் : வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளரான கிராமிய காவல் அவருக்கு வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து காவல் நிலையமும் பூட்டப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர முழுவதும் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் 43 காவலர்கள் தற்போது தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆய்வாளர் தங்கியிருந்த செட்டியப்பணுர் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் மருத்துவர் குழுவினர் வருவாய்த் துறையினர் என அனைவரும் சென்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் பூட்டப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்