மதுரை ஜூன் 5: மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி பகுதியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வாடிப்பட்டியில் செயல்பட்டு வரும் குவாலிட்டி கம்பெனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு புகையிலையின் தீமைகள், அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், புகையிலை பொருட்களை தவிர்க்கும் உறுதிமொழியும் அவர்கள் எடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் நாகா நவீனா, பூர்ணிமா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பூபன் சக்கரவர்த்தி, புவனேஸ்வரன், சமூக நல பணியாளர் ரதிஸ் மற்றும் குவாலிட்டி நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு புகையிலை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக அமைந்தது. பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களிடையே புகையிலை ஒழிப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இது ஒரு முன்னோடி நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
துரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி