திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான காவல்துறையினர் சனிக்கிழமை பர்கிட் மாநகர் அருகேயுள்ள கீழப்பாட்டம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை சோதனை செய்தபோது அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்.
விசாரணையில், அவா்கள் துாத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் அருகேயுள்ள திம்மராஜபுரத்தை சோ்ந்த சுப்பிரமணி (34), லட்சுமணன் (32), அழகுராஜ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்துடன் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்