தஞ்சை : கும்பகோணம்,ஜூன்.9 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரப் புறப்பகுதியான வளையபேட்டை பகுதியில் 7.06.2022 அன்று நடந்த பிரகாஷ் என்பவரின் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்களின் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அழகேசன் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. கீர்த்தி வாசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், காவலர்கள் பாலு, நாடிமுத்து ,சுரேஷ், ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில் கொலையாளிகளை பற்றி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கும்பகோணம் புறப்பகுதியான தாராசுரம் பகுதியில் மறைந்திருந்த கும்பகோணம் வளையபேட்டையை சேர்ந்த குமாரின் மகன் கார்த்தி (25),
அதே பகுதியை சேர்ந்தவர்களான லாட ராஜாவின் மகன் செல்வம் (23), சிவக்குமாரின் மகன் விஜய் (23) ,குணாவின் மகன் ராகுல் (23), முருகன் மகன் முகேஷ் (23) , கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஜொதி என்பவரின் மகன் அப்பு(22) ஆகிய ஆறு நபர்களை கும்பகோணம் தனிப்படை போலீசார் அதிரடியாக இன்று அதிகாலை கைது செய்து அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனம் ஒன்றையும் கைப்பற்றி அவர்களை கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
