திருநெல்வேலி மாநகரம், பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் நரிக்குறவர் காலனியில் 05.06.2025 அன்று ராமசந்திரன் மகன் பட்டவராயன் என்ற மாயா(19) என்பவரது குடும்ப திருமண வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற பாக்கியராஜ் மகன் ஆதி(20) என்பவரை தட்டி கேட்டதில் இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கைகள் மற்றும் கற்களால் தாக்கி கொண்டதில் சிறு காயம் அடைந்த 13 நபர்களை திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்த்ததில், சிகிச்சைக்கு உட்படாமலும் அனுமதியின்றியும் 08 நபர்கள் வெளியே சென்றனர்.
இது தொடர்பாக பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரண்டு தரப்பை சார்ந்த 09 நபர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக அரிவாள் வெட்டு நடந்துள்ளது என தவறான செய்தி பரவி வருகிறது. அவ்வாறு வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மாநகர காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்