மதுரை : திருமங்கலம் சரகம். திருமங்கலம் பெருமாள் கோயிலின் பின்புறத்தில் பிரசாத்( 26) என்பவர் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற கோரி தற்கொலை செய்து கொள்ளபோவதாக, மிரட்டிய நபரை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள் தடுக்கும் பொருட்டு கீழே இறங்கும்படி கூறியவர்களை, தகாத வார்த்தையில் பேசியும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொள்வேன் என்று, மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கிணற்றுக்குள் கிடந்த முதலையை வனத்துறை உதவியுடன் மீட்ட மதுரை மாவட்ட போலீசார்
கீழவளவு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட வண்ணாம்பாறைப்பட்டியில் கிணற்றுக்குள் கிடந்த முதலையை பொதுமக்கள் பார்த்து கீழவளவு போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், காவல் ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா அவர்கள் தலைமையிலான போலீசார், வனத்துறை உதவியுடன் உயிருடன் மீட்டு வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.