இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படவேட்டம்மன் கோவில் ஜங்ஷன் அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கையை திடீர் ஆய்வு செய்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பாகவும் கவனமாகவும் நிறுத்தி வாகன தணிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி பராமரிக்கப்படும் ஆவணங்களில் கையொப்பமிட்டார் .