கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் கோவை மாவட்டம்,வடக்கிபாளையம் மற்றும் காரமடை* காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.குமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.கணேசமூர்த்தி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 13 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய்.2,340/-மற்றும் சேவல்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்