தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 14.12.2021-ம் தேதியன்று புகார் மனுக்களை விசாரணை செய்து கொண்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ், இ.கா.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் அளிக்க வந்திருப்பதை அறிந்து உடனடியாக தனது அறையிலிருந்து மனுதாரர் இருக்கும் இடத்திற்கு சென்று புகார் மனுவினை பெற்று தங்களின் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். காவல் கண்காணிப்பாளரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பொதுமக்கள் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.