திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் அடிதடி, ரௌடிசம், கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும்,
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும்,
கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும்,
சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் lottery விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்,
நீதிமன்ற விசாரணையிலுள்ள வழக்குகளை ஆய்வு செய்து, அரசு வழக்கறிஞரை அணுகி சாட்சிகள் விசாரணையை துரிதப்படுத்தி நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடித்து இறுதி அறிக்கையினை உரிய நீதிமன்றத்தில் E-File மூலம் தாக்கல் செய்திடவும்
தொடர்ச்சியாக விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து, விபத்து குறித்து ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், எச்சரிக்கை பதாகைகள் அமைப்பது குறித்தும் அறிவுரை வழங்கினார்கள்.
மாவட்டத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும், அறிவுறுத்தினார்கள்.
முன்னதாக, ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் வாகனங்களையும் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள்.