தூத்துக்குடி: கடந்த 04.12.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சோபுகான் இன்டர்நேஷனல் கராத்தே அசோசியேசன் சார்பாக நடைபெற்ற 18 வது நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து 500 பேர் கலந்துகொண்டனர். இந்த கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிரியேடிவ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
மேற்படி கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற 27 மாணவ மாணவியர்கள் இன்று (14.12.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாதனை நிகழ்த்திய மாணவ மாணவியர்களை பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.
இந்நிகழ்வின்போது கிரியேடிவ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர்கள் திரு. மணிகண்டன், திரு. மரிய இக்னேசியஸ் ஜோ ஆகியோர் உடனிருந்தனர்.