மதுரை : மதுரை அருகே வயிற்று வலி காரணமாக பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். மதுரை அருகே செக்கானூரணி மாயாண்டி பட்டியை சேர்ந்தவர் பகதூர் மகள் மதன் மஞ்சரி 15. இவர் கருமாத்தூர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது .இதனால் மனம் உடைந்து வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி