திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி., அவர்களின் தலைமையில் (16.11.2025) சேம்பரை கிராம மேற்குப் பகுதியில் அமைந்துள்ள புதுர்நாடு மலைப்பகுதி கிராமங்களில் மதுவிலக்கு சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் சாராயம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் மற்றும் 600 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைப்பகுதி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார், மேலும் இச்சோதனையில் திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு தலைமை காவலர்கள் ஈடுபட்டனர்.
















