கல்லல் காவல் நிலைய சரகம் பனங்குடி மஞ்சுவிரட்டில் மாடு பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டு நபர்களை கொலை செய்யப்பட்டனர். இறந்த இருவரும் அண்ணன் தம்பிகள் ஆவார்கள். மேற்படி கடந்த (22.06.24) தேதி கல்லல் காவல் நிலைய சரகம் பணங்குடியில் மஞ்சுவிரட்டு நடந்தபோது இறந்த நபர்களும் மற்றும் அவர்களுடன் ராஜேஷ்-19/24, s/o. வல்லவன் , அரண்மனை சிறுவயல் , கல்லல், முத்திரையர், நவீன் -19/24 s/o. சிவாஜி , சாத்தரசன் பட்டி,கல்லல், அகமுடையார். அஜய் -20/24, s/o. முத்துமணி, கிளுவச்சி, காளையார்கோவில், இந்து மறவர். என்பவர்கள் மஞ்சுவிரட்டில் மாடு அவுத்து விட்டதாகவும்.
இதை மதன்-20/24, s/o. சக்தி , புதுப்பட்டி ,அகமுடையார் சிவகங்கை என்பவரின் நண்பர்கள் மாட்டை பிடித்ததாகவும் இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும். இதில் கோபத்தில் இருந்த மதன் நண்பர்கள் எட்டு பேர் இன்று (30.06.24) தேதி இரவு 22.30 மணிக்கு மூன்று இரு சக்கர வாகனத்தில் காளையார் கோவில் போதி இன்டர்நேஷனல் பள்ளிக்கு பின்புறம் உள்ள ஆர் எஸ் வதி
காட்டுக்குள் மஞ்சுவிரட்டு மாடு வளர்த்துக் கொண்டிருந்த மேற்கண்ட ஐந்து நபர்களிடமும் மஞ்சுவிரட்டில் நடந்த சண்டையை மனதில் வைத்துக் கொண்டு மேற்கண்ட எட்டு நபர்களும் சேர்ந்து மேற்கண்ட இரண்டு நபர்களையும் வெட்டி கொலை செய்து விட்டு மற்ற மூன்று நபர்களையும் வெட்ட முற்படும் பொழுது ஓடிவிட்டதாகவும். மேற்படி சம்பவம் தொடர்பாக ராஜேஷ், நவீன், ஆகியோர்கள் காளையார்கோவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விசாரணை செய்து வருகின்றனர். மேற்படி இறந்த நபரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது