திருவாரூர் : (15.08.2025) 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் அரசு விடுமுறை அறிவித்த நிலையில், நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த – 1) ரமேஷ்குமார் (49). த/பெ. சுப்பிரமணியன், குச்சிப்பாளையம், கண்டிரமாணிக்கம், திருவாரூர். 2) ராமன் (40). த/பெ. மகாலிங்கம், மனவாளநல்லூர், குடவாசல். 3) ராமகிருஷ்ணன் (39). த/பெ. கலியமூர்த்தி, மனவாளநல்லூர், குடவாசல். 4) தெய்வசிகாமணி (49). த/பெ. தட்சிணாமூர்த்தி, குச்சிப்பாளையம், கண்டிரமாணிக்கம், திருவாரூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நபர்கள் கடத்தி வந்த 28 லிட்டர் மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, கடத்தல், திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் எச்சரித்துள்ளார்கள்.