கோவை: கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 40 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 165 மது பாட்டில்கள் மற்றும் 79 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. சிலம்பரசன் மற்றும் திரு. வெங்கடேசன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது.
சட்டத்திற்கு விரோதமாக சேவல் வைத்து சூதாட்டம் விளையாடிய 11 நபர்களை* கைது செய்து அவர்களிடமிருந்து சேவல்-4 மற்றும் ரூபாய் 2000/- பறிமுதல் செய்தனர்.
இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்