மதுரை : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 23.03.2020 முதல் 28.03.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 436 நபர்கள் மீது மதுரை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செய்து, அவர்களிடமிருந்து 284 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்