மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை கழுவி சுத்தம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலில் எந்த காயமும் இல்லாமல் இறந்து கிடந்தார். சிவப்பு மற்றும் கருப்பு கலர் கட்டம் போட்ட முழுக்கை சட்டையும்,ஊதா வெள்ளை கருப்பு கட்டம் போட்ட கைலியும், ஆரஞ்சு நிற டவுசர் மாடல் ஜட்டியும் அணிந்திருந்தார். அவர் யார் எந்த ஊர் என்று விவரம் தெரியவில்லை. இதுகுறித்து மேல் மதுரை கிராம நிர்வாக அலுவலர் ஜலபதி கொடுத்த புகாரின் பேரில் மதுரை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்கு பதிவு செய்துவிசாரணை செய்தார். அதில் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு வந்த ரயிலில் பயணம் செய்தவர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
ஆனால் அவர் எந்த ஊரில் இருந்து வந்தார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி