• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, June 17, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை கிரைம்ஸ் 30/04/2023

by Admin2
April 30, 2023
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
90 1
A A
0

மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

 

மதுரை :  திண்டுக்கல் சத்திரப்பட்டி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஜெயராமன் (40) இவர் சம்பவத்தன்று அரசு பஸ்ஸில் பயணம் செய்தபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு தலைக்காயப்பிரிவுவார்டில் உள்நோயாளியாக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். இறந்தவர் ஜெயராமனின் மனைவி முத்துலட்சுமியிடம் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் அவரது உறுப்புகளான கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்களின் இரு கருவிழிகள் தானமாக வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜெயராமனின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் உரிய மரியாதையுடன் அவர் குடும்மத்தாரிடம் ஜெயராமனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

விராட்டிபத்தில் வேல் கம்பால் குத்தி தம்பி கொலை அண்ணன் கைது

 

விராட்டிபத்து முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (60), இவரது இரண்டு மகன்கள் பாலமுருகன் (29), திரவியம் (36),இவர்களில் திரவியத்திற்கு குடிப்பழக்கம் இருந்தது .சம்பவத்தன்று குடிபோதையில் தெருவில் திரவியம் ரகளையில் ஈடுபட்டிருந்தார். இதை தம்பி பாலமுருகன் மற்றும் சிலரும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திரவியம் தம்பி பாலமுருகனிடம் தகராறு ஈடுபட்டார். அப்போது தகராறுமுற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் வேல் கம்பை எடுத்த அண்ணன் திரவியம் தம்பி பாலமுருகனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பாலமுருகனை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாய் மாரியம்மாள் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பியௌ கொலை செய்த அண்ணன் திரவியத்தை கைது செய்தனர்.

விளக்கத்தூணில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

 

வெங்கல கடை தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (58), இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய தம்பி மாதவன். இவர்களுக்குள் சொத்து பரிசினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாதவன் அவருடைய மனைவி காஞ்சனா உறவினர் சாரதா ஆகியோர் வாசுதேவனை ஆபாசமாக பேசி தாக்கினர். இந்த சம்பவம் குறித்து வாசுதேவன் கொடுத்த புகாரில் விளக்கத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் வாசுதேவனை தாக்கிய மாதவன், மனைவி காஞ்சனா, உறவினர் சாரதா மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காஞ்சனா புகார் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாசுதேவன் மற்றும் ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பிலும் போலீசார் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

மதுரையில் ஆறு பேர் கைது வெவ்வேறு சம்பவங்களில்!

 

அண்ணாநகர் சப் இன்ஸ்பெக்டர் சத்யகுமார் .இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் அருகே சென்றபோது அங்கு இரண்டு வாலிபர்கள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர். அவர்களை அவர் பிடித்தார். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் வண்டியூர் காளியம்மன் கோவில் தெரு சேதுராமன் மகன் சூர்யா பிரகாஷ் என்ற கால் கட்டை (24), அண்ணா நகர் முந்திரிதோப்பு முத்துப்பாண்டி மகன் மணிகண்டன் என்ற உசிலைமணி (34) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து வாள் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

அண்ணா நகர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ், இவர் எஸ்.எம்.பி, காலனி பின்புறம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்தார். பிடிவட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கரும்பாலை கீழத்தெரு முருகன் மகன் வெள்ளைச்சாமி என்ற ஒயிட் (32), அண்ணா நகர் எஸ் எம்.பி காலனி சக்திவேல் மகன் ஜோதி குமார் என்ற எழும்பன் (23) என்று தெரியவந்தது. அவர்கள் இருவரையும் அவர் கைது செய்தார்.

கே புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சியோன் ராஜா, இவர் அழகர் கோவில் மெயின் ரோடு பாலாஜி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஊமச்சிகுளம் எருக்கநத்தம் செல்வ மகன் சூர்யா என்ற அவ சூர்யா (25), பாலமேடு வெள்ளையம்பட்டி முருகன் மகன் அஜித் என்ற கருவாயன் (22) இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தார்.மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் மொத்தம் ஆறு பேரை போலீசார் ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.

இரண்டு பெண்களிடம் பைக் ஆசாமிகள் கைவரிசை!

 

கருப்பாயூரணி மீனாட்சி நகர் மனோகரன் மனைவி சசிரேகா (46) கோமதிபுரம் மேலமடையில் ஒரு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பைக் ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சசிரேகா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

விளாங்குடியில் செயின் பறிப்பு :  கோரிப்பாளையம் சம்புரோபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் லெனின் மனைவி ரேகா (37), இவர் கணவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.ஸ அவர்கள் சென்ற பைக் விளாங்குடி கொன்டை மாரியம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தது. அவரை பின் தொடர்ந்து சென்ற இரண்டு பைக் ஆசாமிகள், ரேகா அணிந்திருந்த மூன்று பவுன் செயினை பைக்கில் இருந்தபடியே பறித்து சென்று விட்டனர் .இந்த செயின் பறிப்பு குறித்து ரேகா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

ஆரப்பாளையத்தில் கஞ்சாவுடன் பெண் கைது!

 

ஆரப்பாளையம் ஏ.ஏ. ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் தண்டீஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தார். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கரிமேடு அந்தோணியார் கோவில் தெரு முருகன் மனைவி கார்த்திகா (33),கரிமேடு ராஜேந்திரா மூன்றாவது தெரு முத்துசாமி மகன் செந்தில்குமார் (38) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தார் .அவர்கள் வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தார். பைக்கில் சோதனை செய்தபோது பைக்கில் 250 கிராம் கஞ்சா இருந்தது.விற்பனை செய்த பணம் ரூபாய் 95,000 மும் இருந்தது. அவற்றையும் அவர்கள் வைத்திருந்த செல்போன் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: Madurai
Share123Tweet77Send

மேலும் செய்திகள்

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

June 8, 2025
ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

June 8, 2025
திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

June 7, 2025
உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

June 7, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.