மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) ஆனையூர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் திருமதி. வ.இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆகியோர் தலைமையில்
நடைபெற்றது. மதுரை மாநகராட்சி ஆனையூர் பேருந்து நிலையம் அருகில், உள்ள கிழக்கு மண்டலம் 1 அலுவலகத்தில், காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ,சொத்து வரி பெயர் மாற்றம் வேண்டி 22 மனுக்களும், குடிநீர் குழாய் வரி தொடர்பாக 23 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 7 மனுக்களும், சொத்து வரி விதிப்பு தொடர்பாக 2 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக 10 மனுக்களும், காலிமனை வரி தொடர்பாக 23 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 9 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 38 மனுக்களும் என மொத்தம் 134 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில், முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு, மேயர் கூறினார்கள். மேலும், இம்முகாமில் ஏற்கனவே, மனுக்கள் அளித்த மனுதாரர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றம், காலிமனை வரி, கட்டிட வரைபட அனுமதிக்கான ஆணைகளை வழங்கினார்கள். இம்முகாமில், துணை மேயர் திரு. தி.நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, உதவி ஆணையாளர் திரு. ரமேஷ், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் ரெங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் திரு. செந்தில்குமரன், உதவிப் பொறியாளர்கள் திரு. முத்துராமலிங்கம், சோலைமலை, சுகாதார அலுவலர் திரு. ராஜ்கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி