கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 1,35,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள், ₹ 3,120/-ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபானம் இருந்தது,
வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள், மதுபானம் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.