திருவாரூர்: பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு அனுமதியின்றி பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட – 1.மாத்தையன் (வயது-34/25). த/பெ.ஜெயராமன், தெற்கு தெரு, கொத்தவாசல், 2. பழனிவேல் (வயது-23/25). த/பெ.கிருஷ்ணமூர்த்தி, காலணி தெரு, திருவிழிமிழலை ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர். மேலும், அரசு அனுமதியின்றி மணல் திருட பயன்படுத்திய JCB இயந்திரம் மற்றும் டிராக்டர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு மணல் திருடிய நபர்களை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்