திருவாரூர்: வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அரசு அனுமதியின்றி மணல் கடத்தி சென்ற – 1.அன்புஐயா (54/25). த/பெ.ரெத்தினம், வடக்கு தெரு, பாதிரிபுரம், வலங்கைமான் என்பவர் கைது. சிறப்பாக செயல்பட்டு மணல் கடத்தலில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த வலங்கைமான் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, கடத்தல், திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் எச்சரித்துள்ளார்கள்.