திருவாரூர்: நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட -1.பிரபாகரன் (35), த/பெ. பாஸ்கரமூர்த்தி, மேலத்தெரு, மணக்கரை, சேந்தங்குடி, கூத்தாநல்லூர் மற்றும் 2. சுரேந்தர் (24), த/பெ. கலியமூர்த்தி, வடக்கு தெரு, மெயின் ரோடு, எட்டியலூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர். மேற்கண்ட நபர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். மேலும், தொடர்ந்து சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா, குட்கா, பான் மசாலா மற்றும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.