திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் திருமக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட -1) சூரியா (25/25). த/பெ. கலியபெருமாள், கிளாவர் தெரு, பைங்காநாடு மற்றும் 2)மாதரசன் (35/25) த/பெ. கலியபெருமாள், கைலாசநாதர் கோவில் தெரு, மன்னார்குடி, மன்னார்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட – 3)ஆரோக்கியராஜ் (48/25) த/பெ. ராமசாமி, கீழபத்மசாலவர் தெரு,மன்னார்குடி. 4) பார்த்தீபன் (34/25) த/பெ. பசுபதி, மேலத்தெரு, துண்டக்கட்டளை. 5)கவிச்செல்வம் (38/25). த/பெ. மதியழகன், வடக்கு தெரு, மேலத்திருப்பாலக்குடி,மன்னார்குடி. 6) அன்பரசன் (50/25) த/பெ. அய்யாவு, மெயின்ரோடு, ஆலங்கோட்டை, நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட – 7)பழனி (28/25). த/பெ. சேகர், வடக்கு தெரு, முன்னவால்கோட்டை, நீடாமங்கலம் மற்றும் தினேஷ்கண்ணன் (35/25). த/பெ.குணசேகரன், நால்ரோடு, அய்யம்பேட்டை, நீடாமங்கலம் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார்.
மேற்கண்ட நபர்கள் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.மேலும், தொடர்ந்து சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா, குட்கா, பான் மசாலா மற்றும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.