திண்டுக்கல் : கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்க இருக்கிறார். கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கிறார்.
ராகுல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சியின் நிறுவனரான அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற போது திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த திண்டுக்கல் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத் கைது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.