திருநெல்வேலி கோபாலசமுத்திரம், முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் (31) என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் தரப்பில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியான வேலாயுதத்தை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் வேலாயுத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 20,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ், காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, மற்றும் முன்னீர்பள்ளம் காவல்துறையினரையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்