திருநெல்வேலி மாவட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகப் பிடிபட்ட இருவருக்கும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (24) மற்றும் திசையன்விளை இடையன்குடி, தோப்பு தெருவைச் சேர்ந்த முத்துராஜா (29) ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் முன்பே கைது செய்யப்பட்டவர்கள். இவர்களின் செயல்கள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, மீண்டும் குற்றங்களில் ஈடுபடக்கூடிய நிலை காணப்பட்டதால், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப. அவர்களிடம் குண்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், 03.06.2025 அன்று இந்த இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையால், குற்றவாளிகள் மீதான கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்பது உறுதியாகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்