மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி சாலை விதிகளை மீறி இயங்கும் Load Auto வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து மாநகரில் 10 இடங்களில் மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையில் (Load auto Special Drive )போக்குவரத்து விதிமீறல் செய்து பின்வரும் குற்றங்களில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்கள் மீது உரிமம் இல்லாமல் ஓட்டுதல் 15, காப்பீடு செய்யாமை 21, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் 5, வாகனத்தில் அதிக உயரம் 37,சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுதல் 39, வாகனத்தில் விளக்கு சம்பந்தமான குற்றங்கள் 8, இதர வழக்குகள் 189 என மொத்தம் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் ரூபாய் 2,68,500 விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி