திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்துக்குட்பட்ட தேவம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு பாதி குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள 58 நபர்களுக்கு பட்டா வழங்க நான்கு முறை நில அளவை செய்து கோப்புகள் தயார் செய்து அதனை மறைத்து விட்டதாகவும், மீண்டும் அப்பகுதி மக்களுக்காக ஆதி தமிழர் விடுதலை இயக்கம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கள ஆய்வு செய்யப்பட்டது எனவும் இதுவரை இதற்கான பட்டா வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் உடனே இதற்கு பட்டா வழங்க வேண்டுமாறு பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வு ஆயத்தில் தேவம்பட்டு கிராம மக்களுடன் ஆதிதமிழர் விடுதலை இயக்கத்தினர் அதன் நிர்வாகி இளஞ்செழியன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஜமாபந்தி அலுவலர் இதற்கு விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு