திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அண்ணா சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பொன்னேரி நகர செயலாளர் கோகுல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் துரைமுருகன் மாவட்ட பொருளாளர் மீஞ்சூர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் மற்றும் பொன்னேரி வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பெரவள்ளூர் செ.ராஜா கலந்து கொண்டு பொன்னேரியில் நடைபெற்று வரும் சாலை பணிகள் அதனால் ஏற்படும் விபத்துக்கள் போதை வஸ்துகளால் ஏற்படும் பிரச்சனைகள் பொன்னேரி தொகுதியில் உள்ள பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார் இந்த கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் மயில்ராஜ்,திரு குமரன்,கார்த்திக்,ராஜு பாய்,பரந்தாமன்,ராமராஜ்,நித்திஷ்,பிரவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு