விழுப்புரம் : விழுப்புரத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.
-
விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையும் பொதுமக்களும் நல்லுறவேடு செயல்பட முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதில் முழு கவனம் செலுத்தப்படும்பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்கள் குறைகளை கூறுவதற்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.
-
காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களுக்கு நன்மைக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் எடுக்கின்ற நடவடிக்கையாகவே இருக்கும்.
-
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
-
காவல் துறை பொது மக்கள் விரும்பும் துறையாக காவலர்கள் பொதுமக்களின் நண்பர்களாக எப்பொழுதும் இருப்பதற்கான வழிமுறைகள் அமைக்கப்படும்.
-
விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்கள் ஏற்கனவே எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததுபோலவே இப்பொழுதும் ஒத்துழைப்பை விரும்புகிறேன்.
-
காவல் பணி என்பது யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் நீதியை நிலைநாட்டுவதிலும் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதில் மட்டுமே இருக்கும்.
-
எந்த ஒரு குற்றச் செயலும் இங்கு அனுமதிக்க முடியாது.
-
சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
-
சட்டத்தில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்பாதுகாக்கப்படுவார்கள்.
-
விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிசம் முற்றிலும் ஒழிக்கப்படும்.
-
விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பே முக்கிய பணியாக காவல் துறை செயல்படும்.