திருச்சி:திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை விரைந்து கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
அதன்படி, பொதுமக்கள் கொடுத்த புகாரின்படி கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காணாமல் போன செல்போன்கள்; பற்றிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததில் மொத்தம் 133 ஆன்டிராய்டு செல்போன்கள் (மதிப்பு சுமார் ரூ.22,00,000/-) கண்டுபிடித்தும், மீட்டும் அதனை இன்று (05.02.2025)-ந்தேதி திருச்சி மாநகரம் கே.கே.நகர், ஆயுதப்படை சமுதாய கூடத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 133 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.