சிவகங்கை: பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அனைத்து வேலை நாட்களிலும், எப்பொழுது வேண்டுமானாலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து, மனுக்களை கொடுத்து தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் இதுநாள்வரை அவ்வாறு கொடுக்கப்பட்ட புகார்மனு மீது தீர்வு கிடைக்கப்பெறாத பட்சத்தில் நாளை 21.12.2022-ம் தேதி காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பிரச்சனை தொடர்பான குறைகளை முறையிட்டு தீர்வு காணலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.த.செந்தில்குமார் அவர்கள் கூறுகையில் இதுபோன்ற குறை தீர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.