திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் சமைத்து கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 2 பவுன் தங்க நகையை பறித்து சென்ற – அன்பரசன் (49/25). த.பெ.கணபதி, கீழத்தெரு, கோவில்பத்து தெரு, வலங்கைமான், என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கின் விசாரணை வலங்கைமான் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் (24.02.2025) குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதமும் விதித்து வலங்கைமான் குற்றவியல் நீதித்துறை நடுவர் தீர்ப்பு வழங்கினார்கள்.
திருட்டு, வழிப்பறி, பகல் கொள்ளை, கூட்டுக்கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள். மேலும் இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற காவலரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.