வருகின்ற 01.03.2026-ம் தேதி மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் மதுரைக்கு வருகைபுரிவதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும், பொதுமக்களுக்கும், பொது போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி இலகுவான போக்குவரத்தை ஏற்படுத்தும் பொருட்டும் கீழ்க்கண்டவாறு தற்காலிக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தம் தடைசெய்யபட்டுள்ள சாலைகள்/இடங்கள்
1) அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பிலிருந்து விரகனூர் ரவுண்டானா சந்திப்பு வரை
2) மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடமான மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோடு வரை.
- கனரக வாகனங்கள் செல்ல வேண்டிய வழித்தடங்கள்
கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை வழியாக மேலூர் சந்திப்பிற்கும் மற்றும் மேலூர் சந்திப்பிலிருந்து அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை வழியாக கப்பலூர் பாலம் சந்திப்பிற்கும் செல்ல அனைத்து கனரக சரக்கு வாகனங்களுக்கும் 01.03.2026 காலை 06.00 மணிமுதல் இரவு வரை தடை செய்யப்பட்டுள்ளது.
1) திருச்சியிலிருந்து மேலூர் மார்கமாக மதுரை அருப்புக்கோட்டை ரிங்ரோடு கப்பலூர் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர் வழியாக தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று இடதுபுறம் திரும்பி சமயநல்லூர், துவரிமான், கப்பலூர் பாலம் வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவேண்டும்.
2)கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து கப்பலூர் பாலம் சந்திப்பு, அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு வழியாக திருச்சி மற்றும் சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் திருமங்கலம், கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங்ரோடு வழியாக நாகமலைபுதுக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு, சமயநல்லூர் சந்திப்பு மற்றும் தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று வலதுபுறம்அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில் மற்றும் மேலூர் வழியாக திருச்சி செல்லவேண்டும்.
3) தூத்துக்குடி மற்றும் அருப்புக்கோட்டையிலிருந்து விரகனூர் சுற்றுச்சாலை வழியாக திருச்சி மற்றும் சென்னை நோக்கி செல்லககூடிய அனைத்து சரக்கு வாகனங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் சென்று கள்ளிக்குடி, சமத்துவபுரம், திருமங்கலம் மற்றும் கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங்ரோடு வழியாக நாகமலைபுதுக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு, சமயநல்லூர் சந்திப்பு மற்றும் தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில் மற்றும் மேலூர் வழியாக திருச்சி செல்லவேண்டும்.
4) திருச்சியிலிருந்து மதுரை விரகலூர் சுற்றுச்சாலை வழியாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்லக்கூடிய கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக செல்லலாம்.
5) சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து விரகனூர் சுற்றுச்சாலை மற்றும் மதுரை அருப்புக்கோட்டை சிங்ரோடு வழியாக அருப்புக்கோட்டை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் கனரக சரக்கு வாகனம் அனைத்தும் பூவந்தி மற்றும் மானாமதுரை திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி வழியாக செல்லலாம்.
6) தூத்துக்குடி மற்றும் அருப்புக்கோட்டையிலிருந்து விரகாலூர் சுற்றுச்சாலை வழியாக இராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி, நரிக்குடி, திருப்புவனம் வழியாக இராமநாதபுரத்திற்கும், சிவகங்கை செல்லும் வாகனங்கள் திருப்புவனத்திலிருந்து பூவந்தி சென்று சிவகங்கைக்கு செல்லாம்.
7) தேனி மாவட்டத்திலிருந்து சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் நாகமலைபுதுக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சமயநல்லூர் சந்திப்பு மற்றும் தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர், பூவந்தி மற்றும் திருப்புவனம் வழியாக செல்லலாம். மேலும் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டதில் இருந்து தேனி மாவட்டத்திற்கு மேற்கண்ட வழித்தடத்தை பயன்படுத்தி செல்லலாம்
8) திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் தனிச்சியம் பிரிவு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர், பூவந்தி மற்றும்திருப்புவனம் வழியாக செல்லலாம். மேலும் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு மேற்கண்ட வழித்தடத்தை பயன்படுத்தி செல்லலாம்.
- பொதுப்போக்குவரத்து செல்லும் வழித்தடங்கள்
கப்பலூர் சந்திப்பிலிருந்து விரகனூர் ரிங் ரோடு சந்திப்பு மற்றும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடமான மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு, அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோடு வரை எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை.
1) மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து விரகனூர் சுற்றுச்சாலை, கப்பலூர் வழியாக விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் KK.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, வைகை வடகரை சாலை குருவிக்காரன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக கபடி ரவுண்டானா சென்று பாத்திமா கல்லூரி சந்திப்பு வழியாக சமயநல்லூர் சென்று இடதுபுறம் திரும்பி துவரிமான் ரோடு சந்திப்பு, நாகமலைபுதுக்கோட்டை 4-வழிச்சாலை சந்திப்பு மற்றும் கப்பலூர் பாலம் சத்திப்பு வழியாக எந்த ஒரு மாவட்டத்திற்கும் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2) பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலத்திற்கும் திருமங்கலத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கும் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் வழக்கமான வழித்தடமான திருப்பரங்குன்றம் சாலையை தவிர்த்து அரசரடி, காளவாசல் சந்திப்பு வழியாக நாகலைபுதுக்கோட்டை ரிங்ரோட்டில் இடதுபுறம் திரும்பி கப்பலூர் வழியாக திருமங்கலத்திற்கும் திருமங்கலத்திலிருந்து இதே வழித்தடத்தில் பெரியார் பேருந்து நிலையத்திற்கும் செல்லும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
3) கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து, மண்டேலாநகர் சந்திப்பு, விரகனூர் சந்திப்பு மற்றும் பாண்டிகோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து தணக்கன்குளம் சந்திப்பு, நாகமலைபுதுக்கோட்டை 4-வழிச்சாலை சந்திப்பு, துவரிமான் ரோடு சந்திப்பு வந்து வலதுபுறம் திரும்பி காளவாசல், பாத்திமா கல்லூரி, கபடி ரவுண்டானா, MM.லாட்ஜ், ஆவின் சந்திப்பு வழியாக செல்லும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.4) தூத்துக்குடி மற்றும் காரியாபட்டியிலிருந்து அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு, மண்டேலாநகர் சந்திப்பு, விரகனூர் சந்திப்பு மற்றும் பாண்டிகோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் காரியாபட்டி, நடுக்குளம், M.ஆலங்குளம், பொட்டப்பாளையம் சந்திப்பு, சிந்தாமணி ரோடு சந்திப்பு வந்து வலதுபுறம் திரும்பி விரகனூர் ரோடு சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணிக்கும், சிந்தாமணி சந்திப்பு வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கும் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
5) இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து விரகனூர் சந்திப்பு, மண்டேலாநகர் சந்திப்பு மற்றும் அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு வழியாக காரியாபட்டி மற்றும் தூத்துக்குடிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் இராமநாதபுரம் ரோடு, மணலூர் சந்திப்பு, கீழடி சந்திப்பு, கொந்தகை சந்திப்பு, பொட்டப்பாளையம் சந்திப்பு M.ஆலங்குளம், நடுக்குளம் வழியாக காரியாபட்டி மற்றும் தூத்துக்குடிக்கும் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
6) பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தெற்குவாசல் சந்திப்பு, அவனியாபுரம் வழியாக காரியாபட்டி மற்றும் வளையங்குளம் செல்லும் நகரபேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் தெற்குமாரட், பேலஸ் ரோடு, செயின் மேரீஸ் சந்திப்பு, சிந்தாமணி ரோடு, பனையூர், பொட்டப்பாளையம் சந்திப்பு, M.ஆலங்குளம் மற்றும் சோழங்குருனி வழியாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்களின் வழித்தடங்கள்
1) திருச்சி, மேலூர் ஆகிய ஊர்களிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் ஒத்தக்கடை ரிங்ரோடு சந்திப்பு, உயர்நீதிமன்றம் பின்புறம், சிவகங்கை ரோடு சந்திப்பு, விரகனூர் ரோடு சந்திப்பு, சிந்தாமணி ரோடு சந்திப்பு, செம்பூரணி ரோடு சந்திப்பு வந்து அதற்கு அடுத்தாற்போல் அமிக்கா ஹோட்டல் அருகே தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
2) சிவகங்கை மாவட்டத்திலிருந்து வரக்கூடிய வாகனங்கள் சிவகங்கை ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி விரகனூர் ரோடு சந்திப்பு, சிந்தாமணி ரோடு சந்திப்பு, செம்பூரணி ரோடு சந்திப்பு வந்து அதற்கு அடுத்தாற்போல் அமிக்கா ஹோட்டல் அருகே தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
3) இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வரக்கூடிய வாகனங்கள் விரகனூர் ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, சிந்தாமணி ரோடு சந்திப்பு, செம்பூரணி ரோடு சந்திப்பு வந்து அதற்கு அடுத்தாற்போல் அமிக்கா ஹோட்டல் அருகே தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.4) நத்தம் மற்றும் அழகர்கோவில் சாலையிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கடச்சனேந்தல் சந்திப்பு, ஒத்தக்கடை சந்திப்பு, ஒத்தக்கடை ரிங்ரோடு சந்திப்பு, உயர்நீதிமன்றம் பின்புறம், சிவகங்கை ரோடு சந்திப்பு, விரகனூர் ரோடு சந்திப்பு, சிந்தாமணி ரோடு சந்திப்பு, செம்பூரணி ரோடு சந்திப்பு வந்து அதற்கு அடுத்தாற்போல் அமிக்கா ஹோட்டல் அருகே தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
5) அருப்புக்கோட்டை மற்றும் தூத்துக்குடியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் அருப்புகோட்டை சந்திப்பு, மண்டேலாநகர் வழியாக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
6) விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கப்பலூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அருப்புக்கோட்டை சந்திப்பு, மண்டேலா நகர் வழியாக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்
7) தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் சாலை மார்கமாக வரக்கூடிய வாகனங்கள் சுற்றுச்சாலையை பயன்படுத்தி கப்பலூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அருப்புக்கோட்டை சந்திப்பு, மண்டேலா நகர் வழியாக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்
மேற்படி பொதுக்கூட்டத்தின்போது போக்குவரத்து இடையூர் இன்றி பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக ஏற்படுத்தப்பட்டுள்ள மேற்கண்ட தற்காலிக வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வியாபார பெருமக்கள், வாகன ஒட்டிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















