திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பட்டன்காடு, நடுத் தெருவை சேர்ந்த தங்கசாமி மகன் ராதாகிருஷ்ணன் (44). பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மாரீஸ்வரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவுபடி (06.08.2025) அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்