திருவாரூர்: பேரளம் பகுதியில், நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை (72 லிட்டர்) கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் கடத்தி வந்த 400 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, குட்கா, மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
















