திருவாரூர்: நன்னிலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புத்தாறு ஆற்றுப்பாலம் அருகில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த – 1) செந்தில் (எ) மாங்கொட்டை செந்தில் (48). த/பெ. பாலசுப்ரமணியன், ஆற்றங்கரை தெரு, சலிப்பேரி. 2) மணிகண்டன் (40). த/பெ. தெட்சிணாமூர்த்தி பன்னை தெரு, கீழ்குடி, நன்னிலம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நபர் கடத்தி வந்த 7 லிட்டர் பாண்டி சாராய பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, கடத்தல், திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.