திருவாரூர்: நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கந்தன்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நான்கு சக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டி பீர் பாட்டில்கள் கடத்தி வந்த – 1) வெங்கடேஷ் (26). த/பெ. ஸ்ரீதரன், கம்பர் தெரு, விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம். 2) விபின்தாஸ் (28). த/பெ. முருகேசன், கலைஞர் நகர், குரும்பபாளையம், கோயம்புத்தூர் ஆகியோரை கைது செய்யப்பட்டு, அவர்கள் கடத்தி வந்த 48 லிட்டர் பாண்டி பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, கடத்தல், திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.