திருவாரூர் : பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்த – பூந்தோட்டம், மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் விக்னேஷ் (வயது – 29). என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார்.மேற்கண்ட, நபர் கடத்தி வந்த 100 – பாண்டி சாராய பாட்டில்கள் மற்றும் இருச்சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு மது கடத்தலில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மது கடத்தல் மற்றும் கள்ளசந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.