திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (06.01.2026) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி ரூபி அவர்களின் தலைமையில் சுபள்ளிப்பட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் POCSO சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எளிய முறையில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் Kaaval Udhavi App பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. மாணவர்கள் பாதுகாப்புடன் வளரவும், தவறான செயல்களிலிருந்து விலகி இருக்கவும் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
















