திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், (19.01.2026) ஜோலார்பேட்டை உதவி ஆய்வாளர்கள் தலைமையில் திரியாலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ–மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது மாணவர்களுக்கு POCSO சட்டம், குழந்தை திருமண தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் Kaaval Udhavi App பயன்படுத்தி பாதுகாப்பு மற்றும் உதவி சேவைகளை பெறும் முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டு, இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















