தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியரான தூத்துக்குடி ரத்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் ஆரோக்கியராஜ் 51. என்பவரை இன்று தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.