சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.06.2024)-ம் தேதி அன்று பணி ஓய்வு மற்றும் விருப்ப ஒய்வு பெறவுள்ள சமுகநீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசிங்கம், குன்றக்குடி ஆய்வாளர் .வைத்தியநாதன், மாவட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் கருப்பசாமி, வேலாயுதப்பட்டினம் சார்பு ஆய்வாளர் முத்துப்பாலு, ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் நாகராஜன், தேவகோட்டை நகர் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவமுருகன், பழையனூர் சிறப்பு சார்பு ஆய்வாளர் .இராஜாங்கம், காரைக்குடி கட்டுப்பாட்டு அறை சிறப்பு சார்பு ஆய்வாளர் .சீனி, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் .சரோஜா ஆகியோருக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் இ.கா.ப (29.06.2024) பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்