தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளசாராயம்,போதை பொருட்களின் புழக்கம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை தடுப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்சியாக தருமபுரி மாவட்டம் இண்டூர் மற்றும் பஞ்சப்பள்ளி பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பணம் வைத்து சூதாடிய 13 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 56,000/- பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.